தேனி : நீர்வழிப்பாதை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பொதுப்பணித்துறையினர் மந்தநிலை காட்டி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் பலன் தரும் மரங்களை வளர்க்கின்றனர். ராயப்பன்பட்டி, ஆனைமலையான்பட்டி, பெரியகுளம், உப்பார்பட்டி உட்பட பல பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. இதனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு திசைமாறி, விவசாய விளைநிலங்கள் சேதமடைகின்றன. கண்மாய், குளங்களுக்கு நீர் வந்து சேருவதில்லை. நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டும் அதனை செயல்படுத்த அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
No comments:
Post a Comment