பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் தானியங்களில் தேசியக்கொடியை வடிவமைக்கும் ஊர்வல துவக்க விழாவில், காங்கிரஸ் கட்சியினர் காந்திசிலையை மேடையாக்கினர். பொள்ளாச்சியில் பி.ஏ.பி., விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் "கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெறுவதற்காக தானியத்தில் தேசியக்கொடி அமைக்கப்பட்டது. அதற்காக காந்திசிலையில் இருந்து நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்தில் பங்கேற்கும் மாணவிகள், சைக்கிள்களுடன் காலை 9.30 மணிக்கு காந்திசிலை அருகில் ஆஜராகி விட்டனர். விவசாயிகளும் அதே நேரத்திற்கு வந்து விட்டனர். பாரத மாத வேடமிட்டு ஊர்வலத்தை துவக்கி வைக்கும் முக்கிய பிரமுகர்கள் வருகைக்காக அனைவரும் 30 நிமிடம் காத்திருந்தனர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாலசுப்பிரமணியம் வந்ததும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். அதன்பின், காந்திசிலைக்கு மாலை அணிவிக்க கட்சி நிர்வாகிகளும், அதிகாரிகளும் சென்றனர்.பொள்ளாச்சியில் காந்தி சிலையை சுற்றிலும் 10 பேர் நிற்குமளவுக்கு இரும்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் போட்டி போட்டுக்கொண்டு காந்திசிலையை சுற்றிலும் கும்பலாக நின்றனர். ஒவ்வொரு நிர்வாகிகளாக பேசி முடித்ததும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பாசன சங்க தலைவர்கள், ஊர்க்காவல் படையினர், அதிகாரிகள் அனைவரும் "மைக்' பிடித்து 30 நிமிடம் பேசினர். அப்போது, மாணவிகள் அனைவரும் வெயிலில் காத்திருந்தனர். காங்., கட்சியினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, உரையை நிறைவு செய்த பிறகு கீழே இறங்கினர்.போக்குவரத்து நிறைந்த இடத்தில், ஊர்வலம் நடக்கும் போது நிகழ்ச்சியை விரைவு படுத்துவதற்கு பதிலாக, காந்திசிலையை மேடையாக்கி விட்டனர். "கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவும், அரசாங்கத்திற்கு விவசாயிகளின் நிலையை தெரிவிப்பதற்காகவும் நடந்த இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினரின் செயல்பாடு மக்களை முகம்சுழிக்க வைத்தது.
தமிழக அரசியல்
Friday, January 28, 2011
காந்திசிலையை மேடையாக்கிய காங்கிரஸ் கட்சியினர்
நீர்வழி ஆக்கிரமிப்பு அகற்றுவதில் மெத்தனம்
தேனி : நீர்வழிப்பாதை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பொதுப்பணித்துறையினர் மந்தநிலை காட்டி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் பலன் தரும் மரங்களை வளர்க்கின்றனர். ராயப்பன்பட்டி, ஆனைமலையான்பட்டி, பெரியகுளம், உப்பார்பட்டி உட்பட பல பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. இதனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு திசைமாறி, விவசாய விளைநிலங்கள் சேதமடைகின்றன. கண்மாய், குளங்களுக்கு நீர் வந்து சேருவதில்லை. நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டும் அதனை செயல்படுத்த அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
மூவாயிரம் கிலோ தானியத்தில் பொள்ளாச்சியில் தேசிய கொடி
பொள்ளாச்சி: விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து "கின்னஸ்' சாதனை முயற்சியாக மூவாயிரம் கிலோ தானியங்களில் 27 மீட்டர் நீளத்திற்கு தேசியக்கொடியை அமைத்தனர். பொள்ளாச்சியில் பி.ஏ.பி., விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 27 மீட்டர் நீளத்திற்கு தானியங்களில் தேசியக்கொடியை அமைத்து "கின்னஸ்' சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதற்காக, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 27 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலத்தில் மூன்று பாகங்களாக பிரித்து வைக்கப்பட்டிருந்த கட்டங்களில் தானியங்களை நிரப்பினர். விவசாயிகள், மாணவிகள் ஒவ்வொருவரும் வரிசையாக சென்று கட்டங்களில் தானியங்களை தூவினர். முதலில் தேசியக்கொடியின் மையத்தில் இருக்கும் 24 ஆரங்கள் கொண்ட அசோக சக்கரத்தை அமைத்தனர். அரிசியில் நீல நிற சாயத்தை கலந்து அசோக சக்கரம் அமைக்கப்பட்டது. கொடியின் மையத்தில் உள்ள வெள்ளை நிறத்திற்கு அரிசியை கொண்டும், மேல் பகுதியில் காவி நிறத்திற்கு ஜிலேபி பருப்பு கொண்டும், கீழ் பகுதியில் பச்சை நிறத்திற்கு பாசிப்பயிறையும் நிரப்பினர். காலை 10.30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி மதியம் 3.30 மணிக்கு தேசியக்கொடி முழு உருவம் பெற்றது. அதன்பின், பள்ளி மாணவிகள் தேசியக்கொடியை சுற்றிலும் அணிவகுத்து நின்று, தேசத்தை காப்போம், விவசாயத்தை பாதுகாப்போம் என்று உறுதிமொழியேற்றனர். பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், பாசன சங்க திட்டக்குழு தலைவர்கள் பரமசிவம், சின்னசாமி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் ஈஸ்வரமூர்த்தி, ஊர்க்காவல் படைத்தளபதி கண்ணன்,பாசனசபைகளின் கூட்டமைப்பு தலைவர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
Subscribe to:
Posts (Atom)